தமது தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியுடன் கூட்டணி சேர திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தமக்கு தூது விடுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் விஜயகாந்த் கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதாகவும், மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்களை மதிப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், கட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று கோவை வந்த விஜயகாந்த் ,
அங்குள்ள உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது :
கட்சியை வழி நடத்த நிர்வாகிகளுக்கு செயலா ளர், பொருளாளர் பதவி கொடுத்தேன். ஆனால் ஒற்றுமை இல் லாத காரணத்தால் அந்த பதவிகளை நீக்கி விட்டு மாவட்ட பொறுப் பாளர்களை நியமித்தேன். என்றாலும் ஒற்றுமை இல்லாமல் கோஷ்டியாக செயல்படுவது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும்.
நம்மிடம் முன்னாள் ஆளுங் கட்சியினர் பாராளு மன்ற தேர்தலில் 10 இடம் தருவதாகவும், தற்போது ஆளுங்கட்சியினர் நாங்களும் 10 இடம் தருவதாகவும் கூறி கூட்டணிக்கு தூது விடு கிறார்கள்.
நாம் அந்த கட்சிகளுடன் கூட்டணி சேரலாமா? (வேண்டாமென கூட்டத்தினர் குரல்) கருத்து கணிப்பில் இந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் 90 சதவீத வெற்றி கிடைக்கும் என்றும், தனியாக போட்டியிட்டால் 70 சதவீத வெற்றி கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. நாம் கூட்டணி சேரலாமாப தனித்து போட்டியிடலாமா? (மீண்டும் கூட்டத்தினர் வேண்டாம்... வேண்டாம் என்று குரல்)
அப்படியானால் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.