News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு

16-05-2008
Article by:
uthsan s

கர்நாடகாவில் நக்ஸலைட்டு நிறைந்த மாவட்டங்கள் உள்ளிட்ட 66 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற 2வது கட்ட தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் 65 முதல் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. 2ம் கட்டமாக ராய்ச்சூர், கொப்பல், வட கன்னடம், தென் கன்னடம், பெல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, ஷிமோகா, உடுப்பி, சிக்மகளூர் ஆகிய 10 மாவட்டங்கள் அடங்கிய 66 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தொகுதிகளில் ஒரு கோடியே 10 லட்சம் வாக்காளர்கள் இன்று ஓட்டுப் பதிவு செய்ய உள்ளனர். அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என்று 589 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்காளர்களின் வசதிக்காக 270 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பாஜகவின் எதியூரப்பாவும், சமாஜ்வாதி கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவும் ஷிகாரிபுரா தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர். மாநில அரசியில் வரலாற்றில் 2 முன்னாள் முதல்வர்கள் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

சொருபா தொகுதியில் பங்காரப்பாவின் மகன்களான குமார் பங்காரப்பா மற்றும் மதுபங்காரப்பா ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். பெல்லாரி, தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்கள் குவாரி அதிபர்களின் ஆதிக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

நண்பகல்வரை வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருந்தது. பிற்பகல் 1 மணிவரை 25 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது. பின்னர் மாலையில் குறைந்தது.

இறுதியாக 5 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவில் தென் கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாகவும், ஷிமோகாவில் குறைந்தபட்சமாகவும் பதிவானதாகவும் மொத்த சராசரி வாக்குப்பதிவு 65 முதல் 70 சதவீதம் என்றும் தெரிகிறது. சிக்மகளூர் மற்றும் வடகன்னட மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா தமது ஷிகாரிபுரா தொகுதியில் வாக்களித்தார். மற்றொரு முன்னாள் முதல்வர் பங்காரப்பா, அவரது மகன் மது பங்காரப்பா, பாஜக கட்சியின் மாநில தலைவர் சதானந்த கௌட, காங்கிரஸ் தலைவர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், முன்னாள் அமைச்சர் சங்கரமூர்த்தி, பெல்லாரி ஸ்ரீராமுலு, டி.வி.சந்திரகௌட மற்றும் உடுப்பி ஜீயர் பேஜாவரா ஸ்வாமிஜி, சித்ரதுர்கா முருக ராஜேந்திர ஸ்வாமிஜி ஆகியோர் இன்று வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகும்.

முதல் கட்ட வாக்குப்பதிவின் போது இருந்த வாக்காளர் பட்டியல் குழப்பம் இந்த தேர்தலிலும் இருந்தது. அடையாள அட்டை வைத்திருந்தும் பட்டியிலில் இடம் பெறாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்ததாக பலரும் தெரிவித்தனர்.

நக்ஸலைட்டுகள் நிறைந்த உடுப்பி, வட கன்னட, சிக்மகளூர், ஷிமோகா மாவட்டங்களில் சில பதற்றமான பகுதிகளில் துணை ராணுவ படை உள்பட 75,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பாதுகாப்பை மீறி உடுப்பி அருகே நக்சலைட்டுகள் திடீரென்று நடத்திய தாக்குதலில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவரும், போலீஸ் ஏட்டு ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் பீதி அடைந்தனர். இன்று ஓட்டுப் போட வராமல் வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர். தகவல் அறிந்து துணை ராணுவத்தினரும் போலீசாரும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மக்கள் தைரியமாக வந்து ஓட்டு போட்டனர்.

மற்றபடி, குறிப்பிடும்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.

வரும் 22ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது.

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions