மும்பை விமானம் தப்பியது முன்பக்க சக்கரம் கழன்று விழுந்தது நேற்று மதியம் மும்பையிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்ப இருந்தது. பயணிகளை ஏற்றுவதற்கு முன்பாக அந்த விமானத்தை வழக்கம் போல் என்ஜினீயர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த விமானத்தின் முன்பகுதி சக்கரம் திடீரென கழன்று விழுந்தது. விமானம் கிளம்புவதற்கு முன்பாகவே சக்கரம் விழுந்ததால் நடக்கவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதன் பின்னர், வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மும்பையிலிருந்து சென்னை செல்லவேண்டிய ஏர்பஸ்-320 விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் விமான கதவு இணைப்பு பாலத்தில் இடித்ததால் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.