ஐ.பி.எல்., அமைப்புக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) அங்கீகாரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் ஐ.சி.எல்., அமைப்புக்கு "நோ' சொல்லி விட்டது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் டுவென்டி20 வரும் ஏப்ரல் 18ம் தேதி தொடங்க உள்ளது.
கோடிக்கணக்கான பணம் புழங்கும் விளையாட்டாக கிரிக்கெட்டை மாற்றியதன் மூலம், பல நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி வீரர்களை கோடிகளை கொட்டி வாங்கியதால், தங்களுடைய சொந்த நாட்டு அணிக்காக விளையாடுவதை விட, ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சிறிய நாடுகள், தங்கள் அணியில் திறமையான வீரர்களை ஐ.பி.எல்.,லிடம் இழக்கும் நிலையில் உள்ளன. குறிப்பாக, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள், ஐ.பி.எல்., உடன் போட்டி போடும் அளவுக்கு நிதிவசதி இல்லாததால், முன்னணி வீரர்களை இழக்கும் இக்கட்டான நிலையில் உள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல்., விவகாரம் குறித்து துபாயில் நடந்த ஐ.சி.சி., செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல்., அமைப்புக்கு அங்கீகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந் தின் கவுன்டி கிரிக்கெட் போல ஐ.சி.சி., அந்தஸ்து தரப்பட்டது. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் போர்டின் அனுமதி பெறாததால் கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்புக்கு அங் கீகாரம் மறுக்கப்பட்டது. தவிர சர்வதேச போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., மற்றும் இந்திய கிரிக்கெட் போர் டுக்காக சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மாற்றியமைக்கப்படாது என்றும் ஐ.சி.சி., அறிவித்துள்ளது.