சர்ச்சைக்குரிய சோயப் அக்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனேகமாக முடிவுக்கு வருகிறது. தடையை எதிர்த்து இவர் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் "புயல்வேக' பந்துவீச்சாளர் அக்தர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,) கொள்கையை விமர்சித்தது, சகவீரர் ஆசிப்பை பேட்டால் தொடை யில் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி னார். இதையடுத்து இவருக்கு பி.சி.பி., 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஐ.பி.எல்., "டுவென்டி20' தொடரிலும் பங்கேற்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் தடையை எதிர்த்து அக்தர் அப்பீல் செய்தார். இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அப்தாப் பரூக் தலைமையிலான 3 நபர் அடங்கிய கமிட்டி அமைக் கப்பட்டது. முதற்கட்ட விசா ரணையின் போது வெளிப் படையாக மன்னிப்பு கேட்டார்.
இந்தச் சூழலில் விசாரணை கமிட்டி நேற்று தனது இடைக்கால தீர்ப்பை அறிவித் தது. இறுதி கட்ட விசாரணை வரும் ஜூன் மாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நீதிபதி அப்தார் பரூக் கூறுகையில்,""அக்தர் தன்னை திருத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்க வில்லை. விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஒழுக்கமின்றி நடந்து கொண்டார். இதனால் தடை நீடிக்கப்படுகிறது. ஒழுங்கு கமிட்டியின் உத்தரவுப்படி பாகிஸ்தானில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. ஐ.பி.எல்., அமைப்பில் விளையாட தடை விதிக்கப் படவில்லை. அக்தர் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பித்ததை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது இடைக்கால உத்தரவு தான் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு ஜூன் மாதத்தில் வழங்கப் படும்,''என்றார்.
சம்பாதிக்க தடை இல்லை ஐந்தாண்டு தடை விதிக்கப் பட்டாலும் அக்தர் கிரிக் கெட்டில் சம்பாதிப்பதை தடுக்க பி.சி.பி., விரும்ப வில்லை என கூறப்பட்டு உள்ளது. பி.சி.பி., சட்ட ஆலோசகர் டபாசுல் கூறுகை யில்,""பாகிஸ்தான் தவிர எங்கு வேண்டு மானாலும் அவர் விளையாடி சம்பாதிக்கலாம். தடை பாகிஸ்தானுக்குள் மட்டுமே நடை முறைப் படுத்தப்படும்,'' என்றார்.
ஐ.பி.எல்., எப்படி? : இடைக்கால உத்தரவுப்படி ஐ.பி.எல்., தொடரில் அக்தர் விளையாடலாம். ஆனால் இவருக்கு அனுமதி அளிக்க ஐ.பி.எல்., நிர்வாகம் தயாராக இல்லை. இவர் கோல்கட்டா அணிக்காக ரூ. 1.7 கோடிக்கு வாங்கப் பட்டார். இது குறித்து ஐ.பி. எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""நடத்தை விதிமுறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறோம். பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட வீரர் இந்தியாவில் மட்டும் எப்படி விளையாட முடியும்,''என்றார்.