ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல், ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். வித்யூத் 5, பத்ரிநாத் 15, தோனி 1, மோர்கெல் 42, நிதினி 11 ரன்கள் எடுத்தனர்.
19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. தன்வீர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.
ஸ்மித் 35, வாட்சன் 14, யூசுப் பதான் 8, அஸ்னோட்கர் 32 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 8 விகெட்டுகள் வித்தியாசத்தில் ராஜ்ஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆட்டநாயக்னாக தன்வீர் தேர்வு செய்யப்பட்டார். சென்னை அணிக்கு இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.