ஆந்திர மாநிலம் விஜயாவாடா அருகே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மீது சூதாட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை டெல்லி அணிக்கும் , கோல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி மீது , விஜயவாடா அருகே உள்ள கோவிந்த ராஜுலு மீன் மார்க்கெட் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூ.69,756 ரொக்க பணம், 9 மொபைல் போன்கள் மற்றும் ஒரு டிவி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு ,அவர்கல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.