கான்பூர் டெஸ்ட் போட்டிக் கான ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக ஐ.சி.சி., அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.சமீபத்தில் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங் கேற்றது. மூன்றாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது.
இப்போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டதாக தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கேற்ப சுழற்பந்துவீச்சாளர்கள் சாதித் தனர். 3 நாளில் 32 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்திய அணி சூப்பராக வெற்றி பெற்று தொடரை 11 என சமன் செய்தது.
பின்னர் ஆடுகளம் தொடர்பாக "மேட்ச் ரெப்ரி' மகானாமா ஐ.சி.சி.,க்கு கடிதம் எழுதினார். இதில் ஆடுகளம் டெஸ்ட் தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படவில்லை என வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ஐ.சி.சி. தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பி.சி.சி.ஐ., விளக்க கடிதம் அனுப்பியது. இதனை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.சி.சி., மானேஜர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், ""எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்தோம். இதன் அடிப்படையில் பார்த்தால் கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசமாக அமைக்கப் பட்டுள்ளது. விதிமுறை 4.2ன் கீழ் பி.சி.சி. ஐ.,க்கு அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளோம். சர்ச்சைக்குரிய ஆடுகளத்தை ஆய்வு செய்யும்படி பி.சி.சி.ஐ., ஆடுகள கமிட்டியின் ஆலோசகர் தல்ஜித் சிங்கை கேட்டுக் கொண்டுள் ளோம். வரும் காலத்தில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டுக்கும் ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
பி.சி.சி.ஐ., செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ""ஆடுகளம் தொடர்பான ஐ.சி.சி., ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.