இலங்கையில் இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்றைய தினம் குருணாகல் வலகெதர மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி, இலங்கை அணியை 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டித் தொடரில் பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான முன்னைய போட்டிகளில் எதிலுமே தோல்வியடையாத இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரையறுக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.