'இம்சை அரசன்' கைகொடுத்த அளவில், 'கடவுள்' கைகொடுக்கவில்லையே என்ற வருத்தம் தோய்ந்த கோபத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் 'இயக்குனர்' ஷங்கர்.
சிம்புதேவன் இயக்கத்தில் உருவான 'அறை எண் 305ல் கடவுள்' படமும் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' போல் வசூல் மழை பொழியும் என்று கணித்தார் தயாரிப்பாளர் ஷங்கர்.
ஆனால், படம் வெளியாகி நான்கே வாரத்தில் நான்கு திசைகளிலிருந்தும் அவரது 'அறை'க்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
கடவுளை வெற்றியடையச் செய்ய தனது சிஷ்யர்கள், நண்பர்கள் என பல தரப்பிலிருந்து கடிதங்கள் பெற்று, அதை பத்திரிகைகளில் பிரசுரித்துப் பார்த்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது.
இப்போது யோசிக்கிறார்... 'ரிலையன்ஸ் நிறுவனம் கேட்டபடியே ரூ.8 கோடிக்கு கொடுத்திருக்கலாமே; சொந்தமாக வெளியிட்டிருக்க வேண்டாமே' என்று!