News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > Entertainment

மரணம் துரத்தும் குழந்தைகள்

10-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

அழகழகான 32 பிஞ்சு முகங்கள். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாவிட்டாலும், அவர்கள் முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகம். இவர்கள் அத்தனை பேரையும் துரத்திக் கொண்டிருக்கிறது மரணம். கோவிலில் தஞ்சமடைய வேண்டிய அந்த குழந்தைகளின் பெற்றோர்கள், கோவிலாக நினைத்து தஞ்சமடைந்திருக்கும் இடம் நடிகர் லாரன்சின் வீடு.
 
மதுரை, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து அங்கே வந்திருக்கும் கூலித்தொழிலாளர்களான அந்த பெற்றோர் முகத்தில் கொஞ்சம் நிம்மதியும் கலந்திருப்பதற்கு காரணம் லாரன்ஸ்! ஊனமுற்றவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை விளக்கேற்றியவர், சமீப காலமாக 40க்கும் மேற்பட்ட அனாதை சிறுவர்களையும் தனது பாராமரிப்பில் வளர்த்து வருகிறார். அவர்களுக்கு கல்வியும் போதிக்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்காக தான் கட்டிய சொந்த வீட்டை ஒதுக்கிவிட்டு வாடகை வீட்டில் குடியிருக்கிறார் லாரன்ஸ்.
 
லாரன்ஸ் வளர்க்கும் நாற்பது அநாதை குழந்தைகளோடு இணைந்தவர்கள்தான் இந்த முப்பத்தியிரண்டு சிறுவர் சிறுமியரும். கண்கலங்க பேச ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். “நான் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் செய்து அதில் வருகிற வருமானத்தை கொண்டு மருத்துவ உதவிகள் செய்து வருகிறேன். இந்த முறையும் அப்படி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் மயக்கமடைந்துவிட்டான். மருத்துவ மனைக்கு கொண்டு போனால், இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து என்றார்கள். இன்னும் நிறைய குழந்தைகளின் நிலையும் இதேதான். காத்திருப்பதற்கு ஏது நேரம்? அதனால்தான் டொனேஷன் கேட்டு பலரிடமும் கையேந்த வேண்டிய நிலை. இந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை கூட தவறவிடக்கூடாது. அதற்காக தயவு செய்து உதவுங்கள்” என்றார். பக்கத்தில் அவரது முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தன பிஞ்சுகள்.
 
அந்த நிமிடமே இயக்குனர் பேரரசு தனது பங்காக 50 ஆயிரத்தை அளித்தார். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் சினிமா பிரஸ் கிளப் சார்பாக பத்தாயிரத்தை அளித்தார்கள். கடலில் பெருங்காயத்தை கரைத்த மாதிரிதான் இந்த உதவி. இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் உங்களால் முடியும் அந்த குழந்தைகளை காப்பாற்ற. தனியொரு மனிதராக தன்னை உருக்கி கொண்டிருக்கும் லாரன்சுக்கு கைகொடுத்தால், இன்னும் எத்தனையோ உதவிகள், சேர வேண்டியவர்களுக்கு முறையாக போய் சேரும். அன்புள்ளங்களே... பரிசீலியுங்கள்.
 
உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி-
 

லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்,
பதிவு எண் 1372/2005
2/4 4-வது குறுக்கு தெரு, 3-வது அவன்யூ,
அசோக் நகர், சென்னை 600 083.
 
 
Email Address : larenccecharitabaletrust@yahoo.com
larenccecharitabletrust.blogspot.com
 
நேரடியாக வங்கிக்கு பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்கண்ட சேமிப்பு கணக்கு எண்ணிற்கு (S.B.Account) அனுப்பலாம்.
 
Standard Chartered Bank - S.B A/C No. 4360 Ashok Nagar Branch.
 
Canara Bank S.B A/C No - 46149 Ashok Nagar Branch.
 
State Bank Of India - S.B A/C No. 303557224 Ashok Nagar Branch
 
 
 Other Articles
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
•  15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை
•  15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
•  15 May 2008 09:35:00 இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்
•  15 May 2008 09:33:00 சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
•  15 May 2008 09:30:00 சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது
•  15 May 2008 09:26:00 போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
•  15 May 2008 05:30:00 பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
•  15 May 2008 05:29:00 கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
•  15 May 2008 05:27:00 திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்திற்கு பாதுகாப்பு
•  15 May 2008 05:26:00 இன்று மாலை மகேஸ்வரியின் இறுதிக்கிரியை
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions