ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற் ற கார்க் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளதுடன் 35 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாப் அல் முதாம் எனும் கடைத் தொகுதிகள் நிறைந்த பிரதேசத்திலேயே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அந்நாட்டு வீடமைப்பு அமைச்சுக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனமொன்றே இத்தாக்குதலின் பிரதான இலக்காக இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் ஈராக்கிற்கு முதற்றடவையாக விஜயம் செய்துள்ள நிலையிலேயே, இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.