30 வருடங்களுக்கு முன் உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய பள்ளிவாசலொன்றின் நிர்மாணப் பணிகள், நீண்டகால இடைவெளிக்குப் பின் பூர்த்தியடைந்து அப்பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்தபோது அதற்கு நிதியுதவி வழங்கிய லிபியத் தலைவர் மும்மார் அல் கடாபியின் பெயர், உகண்டா தலைநகரில் அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாசலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
லிபிய தலைவரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் ஆரம்ப விழாவில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொண்டனர். ஆபிரிக்காவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலொன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பது, 1979 ஆம் ஆண்டு உகண்டாவிலிருந்து வெளியேறி சவூதி அரேபியாவில் வாழ்ந்த இடி அமீனின் நீண்ட நாள் கனவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் சோமாலியா, கென்யா மற்றும் றுவண்டா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக பல ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.