ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், இந்தியா மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைவாய்ப்புகளை (அவுட்சோர்சிங்) வெளிநாடுகளுக்கு அளிப்பதை தடை செய்வேன்' என்று ஹிலாரி அறிவித்துள்ளார்.
இதனால், சாப்ட்வேர் துறையில் கோடிகளை அள்ளும் இந்திய நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்தியாவுக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. சீனாவை மனதில் வைத்துதான் ஹிலாரி இவ்வாறு பேசினார் என்று அவரது பிரசார குழுத் தலைவர் டெரி மெக்லிஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்றும் ஹிலாரி விரும்புகிறார். இரு நாட்டுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என்று டெரி மெக்லிஃப் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு நேர்மாறாக இந்தியா மீது ஹிலாரி பாசம் வைத்திருப்பது அமெரிக்கவாழ் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது நாய்க்கு இந்தியா என பெயர் வைத்தது, உலகில் உணவுப் பற்றாக்குறை, கச்சா எண்ணெய் விலைஉயர்வுக்கு இந்தியர்கள்தான் காரணம் என அதிபர் புஷ், விதண்டாவாதங்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.