டுசல்டோவ்,பிராங்போட்,ஸ்ருட்காட்,பெர்லின்,காம்பேர்க்,கனேவர் ஆகிய யேர்மனிய முக்கிய நகரங்களில் நேற்றைய தினம் யேர்மன் வாழ் தமிழீழ மக்களால் மேதினப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பேரணிகளில் தாயகத்தில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் யேர்மன் மொழியிலான பாததைகளையும் மக்கள் தாங்கிச் சென்றதுடன் தேசியத்தலைவர் அவர்களின் படங்கள் தமிழீழத்தேசியக் கொடி என்பவற்றை மக்கள் தங்களில் தாங்கிச் சென்றனர்.
தற்போதைய சிறீலங்கா அரசின் மனிதஉரிமை மீறல்களை விளக்கும் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் யேர்மன் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஒவ்வொரு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டர்கள்.
பேரணியின் முடிவில் தற்போதைய தாயகநிலைமைகள் சம்பந்தமாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது அங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் விடுதலைப்போராட்டத்திற்கான தமது ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியுடன் கலைந்து சென்றனர்.