News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > Special coverage

ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்

13-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் 17 பேர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பிலான எந்தவொரு விபரங்களையும் தான் இன்றுவரையில் அறிந்திருக்கவில்லை என சம்பவதினத்தன்று மூதூர் பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகள் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன. இதன்போது சிவில் அமைப்பு சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீல் டயஸ் சாட்சியை குறுக்கு விசாரணை செய்தபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
 
அக்ஷன் பெய்ம் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேலன், இராணுவத்தரப்பு சட்டத்தரணி கோமின் தயாசிறி அரசதரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி துலிப் ஜயகொடி ஆகியோரும் சாட்சியை குறுக்கு விசாரணை செய்தனர். சாட்சியான பொலிஸ் அதிகாரி மேலும் கூறியதாவது:
 
மூதூர் நகரப் பாதுகாப்புக்கென 156 ஊர்காவல் படையினரும் 223 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு சோதனைச்சாவடிகள் பலவும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி மூதூரில் மோதல்கள் ஆரம்பித்த அதேவேளை, எம்மிடையேயான தொடர்புகள் அன்றைய தினம் காலை 11.00 மணியளவில் துண்டிக்கப்பட்டிருந்தன.
 
புலிகளின் மோட்டார் தாக்குதல்களில் நகர பொலிஸ் காவலரண் முற்றாக அழிக்கப்பட்டது. அத்துடன் இந்த தாக்குதல்கள் 2, 3ஆம் திகதிகளிலும் தொடர்ந்த வண்ணமிருந்தன. இதனால் எமது பாதுகாப்பு படையினரில் 6 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகினர். தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் மூதூர் நகர பொலிஸ் காவலரண் தாக்கப்பட்ட விடயத்தை அங்கு பொறுப்பில் இருந்த பொலிஸ் அதிகாரி சரத் சந்திர மோட்டரோலா ரேடியோ போன் மூலமாகவே தெரிவித்தார். மூதூர் நகரத்தில் தாக்குதலை நடத்திய புலிகள் நகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம், தொலைத்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடும் நிலவியது. இதன் பின்னர் மூதூர் நகரப்பாதுகாப்புக்கென மூன்றாம் திகதி பி.ப. 2.00 மணியளவில் இராணுவத்தினர் வந்து சேர்ந்தனர். மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த இராணுவத்தினர் 4ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் பொலிஸ் நிலையத்திலிருந்து சென்று விட்டனர்.
 
முதலாம் திகதி முதல் நான்காம் திகதிவரையில் மூதூரின் நிலைமைகள் மோசமாக இருந்தமையால் அன்றைய தினங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த பொலிஸ் அறிக்கைகள் 5ஆம் திகதியே பதிவு செய்யப்பட்டன.
 
இந்த சந்தர்ப்பத்தில் ஊர்காவல் படையினராக கடமையில் இருந்தவர்களது வீடுகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தன.ஆனாலும் அவர்களை வீடுகளுக்கு செல்ல நான் அனுமதிக்கவில்லை என அக்ஷன் பெய்ம் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேலன் கேட்ட கேள்விகளுக்குப் பதலளித்தார். இதன் பின்னர் சிவில் அமைப்பு சட்டத்தரணி நீல் டயஸின் குறுக்கு விசாரணையின்போது பதிலளிக்கையில், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதுகாப்பு விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தையொன்றுக்காக 2006 ஆகஸ்ட் முதலõம் திகதி திருகோணமலைக்கு சென்றிருந்ததால் அன்றிலிருந்து அவர் மூதூருக்கு திரும்பிய 4ஆம் திகதி வரையில் மூதூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக நான் கடமையேற்றிருந்தேன். மேலும் 2006 பெப்ரவரி 8ஆம் திகதி முதல் மூதூரில் இருந்தமையால் மூதூர் குறித்த போதிய அனுபவமும் எனக்கு இருந்தது. மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவிலேயே அக்ஷன் பெய்ம் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் அமைந்திருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ரோந்து நடவடிக்கைகளின் போது அந்த அலுவலகம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால் அவ்வலுவலகத்துக்குள் சென்றதில்லை.
 
மூதூரில் அமைந்துள்ள அக்ஷன் பெய்ம் அலுவலக ஊழியர்கள் கொல்லப்பட்ட விடயம் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாகதெரிந்து கொண்டேன். அது ஆகஸ்ட் நான்காம் திகதிக்குப் பின்னராகும்.அதேவேளை திருகோணமலைக்குச் சென்றிருந்த மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நான்காம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு திரும்பியிருந்தார். அன்றைய தினமே ஊழியர்கள் கொல்லப்பட்டதை தெரிந்து கொண்டிருந்தாலும் அதன் விசாரணை நடவடிக்கைகள் எனது சார்பில் இடம்பெறவில்லை. இவ்விசாரணைகளுக்கென எமது பொலி ஸ் நிலையத்தில் இயங்கும் குற்றத்தடுப்புப்பிரிவு குழு ஒன்றை நியமித்திருந்தது. இருப்பினும் மூதூரில் கொல்லப்பட்ட அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் தொடர்பில் எந்தவொரு விபரங்களையும் இதுவரையில் நான் அறிந்திருக்கவில்லை என்றார்.
 
இராணுவத்தரப்பு சட்டத்தரணி கோமின் தயாசிறியின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மூதூரில் அமைந்துள்ள அக்ஷன் பெய்ம் அலுவலகத்தில் தங்கியுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு மற்றும் திருகோணமலை பிரதான அலுவலகங்களில் இருந்து எந்த அறிவிப்பும் எமக்கு வழங்கப்படவில்லை என்றார்.
 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions